ஜூன்21, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் இரயில்வே பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2 விழுக்காடு உயர்ந்தது.
இப்படி கடந்த ஆண்டு மட்டும் இரயில் பயணிகள் கட்டணம் 22 விழுக்காடு உயர்வு அதேபோல் சரக்குக் கட்டணமும் கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ஒருமுறையும், அக்டோபரில் இரண்டு முறையும் 8.9 விழுக்காடு அளவுக்கு ஏற்றப்பட்டது. தற்போது மீண்டும் 6.5 விழுக்காடு அதிகரித்தால் சரக்கு போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்து, விலைவாசியும் கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தற்போது மக்களின் நன்னோக்கமான எதிர்பார்ப்பில் இருக்கும் மத்திய அரசு இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலின் போது தமிழகத்தின் மீதும் வைகோவின் மீதும் பற்று கொண்ட வட இந்திய பிஜேபி அரசியலர்கள் தற்போது இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது “தாமரை இலை தண்ணீர் போலதானா”?
![]()

