அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியை இரு பிரிவினர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அசாமிற்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையேயான எல்லைப்பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.
நேற்று மாலை 5.30 மணியளவில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவானதென்றும், அதன் காரணமாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் பத்து பேர் வரை பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் மூவரை காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலப்பிரச்சினை தொடர்பாகவே இரு குழுக்களுக்கும் மோதிக்கொண்டது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
![]()

