அமெரிக்காவில், விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவ்யானி கொப்ரகடே இன்று இந்தியா திரும்புகிறார்.
அமெரிக்காவின் விதிமுறைகளுக்கு மாறாக விசா நடைமுறையில் தவறு செய்ததாகவும், வீட்டின் பணிபெண்ணிற்கு குறைந்த ஊதியம் கொடுத்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டார். இவர் இந்தியாவின் கடுமையான முயற்சிக்குப் பின் இன்று நாடு திரும்புகிறார்.
நாடு திரும்பும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்றும், ஆதாரமற்றது என்றும் நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இவருடைய தந்தை இங்கு நடந்த போபர்ஸ் ஆயுத பெற ஊழலில் தொடர்புடையவர் என்று ஒரு செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()

