ஓகி புயலால் வீசிய பலத்த காற்று காரணமாக கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் மரங்கள் மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

Loading