காதல் காட்சிக்கு யாரும் டூப் போடாத போது சண்டை காட்சிக்கு மட்டும் டூப் போடுவதில் நியாயம் இல்லை என்று அஜீத் குமார் தெரிவித்துள்ளார். சண்டை காட்சிகளில் டூப் போட விரும்பாதவர் அஜீத்.
எத்தனை ரிஸ்க்கான காட்சியாக இருந்தாலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடிப்பவர். அப்படி அவர் வீரம் படத்திலும் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ரயிலில் வரும் ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளார்.
இந்த காட்சி குறித்து சிவா கூறுகையில்:-
ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு கையால் சண்டை போட்டுக் கொண்டு மற்றொரு கையால் கம்பிகளை பிடித்து அஜீத் நகர வேண்டும். இந்த காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் போடலாம் என்று அஜீத்திடம் தெரிவித்தேன். ஆனால் அவர் டூப் போட மறுத்துவிட்டார்.
“வாங்குற பணத்துக்கு உழைக்கனும்”
![]()

