ஜூலை 18, தஞ்சை நெற்களஞ்சியத்திற்கு காவிரியில் எப்போதும் ஜூன்12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான முறையை மாற்றி எழுதியுள்ளனர் அரசியலாளர்கள்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான ஆணையை அரசிதழலில் வெளிவரச் செய்து ஒரு நம்பிக்கைத் தந்தார்.

paddy
ஆனால் எங்களுக்கு போதுமான தண்ணீர் இல்லையெனக் கூறி கேரளா அரசு தண்ணீர் தரமறுக்கிறது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் யாருக்கு கூறப்பட்டது, என்னவாகிப் போனது என்று தெரியவில்லை!

பருவ  மழையும் பொய்த்துப் போக நெற்களஞ்சியம் என்பது மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இருந்தும் இனிப்பூட்டும் செய்தியாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கபினி அணை நிரம்பியதை அடுத்து அதில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்படும் நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 22 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் அடியாகவும் உயர்ந்துள்ளது.

இருந்தும் தண்ணீர் திறக்கப்படும் நாள் அறிவிக்கப்படாத சூழல் நீடித்து வருகிறது. இது விவசாயிகளிடத்தில்  கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Loading