ஏப்ரல் 30,

modi2

இந்தியாவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பாராளுமன்ற தேர்தல் நடந்துவருகிறது. இதில் இன்று குஜராத் காந்தி நகர் வாக்குச்சாவடியில் வாக்களித்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் மோடி வாக்குச்சாவடிக்கு அருகில் கட்சி சின்னத்தை வைத்திருந்தார், இதன் மூலம் அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

இதை தொடர்ந்து மோடி வாக்களித்து விட்டு விரலை காண்பித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தன் கையில் தாமரை சின்னத்தை வைத்திருந்தார் என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி புகாரின் பேரில் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

 

Loading