ஜூலை 26, உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், காண்ட் பகுதியில் கோயில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி அகற்றப்பட்டதை எதிர்த்து பாஜகவினர், கடந்த ஜூலை 4ம் தேதி மகாபஞ்சாயத் எனும் சமுதாய பஞ்சாயத்து கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதை போலீஸார் தடுக்க முற்பட்டபோது, வன்முறை வெடித்தது. இச்சம்பவத்துக்கு சமாஜ்வாதி கட்சியே காரணம் என்று, பாரதீய ஜனதாவும், பா.ஜ.தான் என்று சமாஜ்வாதி கட்சியும் ஒருவரையொருவர் காரணம் காட்டிவருகின்றனர். இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
![]()

