செயற்கை இதயம் செயலிழந்த பரிதாபம்!

World's first artificial heart patient dies in Paris after 75 days

மார்ச் 06: இதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இதயம் பொருத்தப்பட்டு வருகிறது. அது போன்று இதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

அதை தடுக்க செயற்கை இதயம் தயாரித்து அதை பொருத்தும் பணியில் பிரேஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் ஈடுபட்டுள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இதயம் 76 வயது இதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18–ந்தேதி பொருத்தப்பட்டது. அது சிறந்த முறையில் இயங்கியது.

எனவே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி அவரது செயற்கை இதயம் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. பொதுவாக இது போன்ற இதயயங்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். கார்மேட் நிநுவனம் அதை நவீன மயமாக்கி நீண்ட நாட்கள் இயக்கும் வகையில் வடிவமைத்து இருந்தது.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு