ஜூலை19, திருச்சி என்ஐடி (தேசிய தொழில்நுட்பக் கழகம்) பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி, தஞ்சைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வருகிறார்.
இன்று திருச்சி என்.ஐ.டி. வளாகத்துக்கு வரும் குடியரசுத் தலைவர், மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பின்னர், மாலை 4.15 மணிக்கு என்.ஐ.டி பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
விழாவுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பிரணாப் முகர்ஜி, மாலை 5.45 மணிக்குத் தனி விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
![]()

