திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டதாகவும், அதன்பின்பு ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்தபோது, தனக்கு சோர்வாக இருப்பதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலாது என்று சாதாரணமாக சொன்ன பதில், வேறு விதமாக வெளியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()

