பிப்ரவரி 26:ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து . இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அணியின் கேப்டன் விராத் கோலி 122 பந்துகளில் 16 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோலி அடித்துள்ள 19-வது சதம் இதுவாகும்.