
பாட்னா, பிப்ரவரி 25:பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.,க்கள் இன்று கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அக்கட்சியில் 8 எம்.எல்.ஏக்கள் விலகியிருப்பது லாலுவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மேலும் சட்டசபையில் தங்களுக்கு தனி இடம் தேவை என்று சட்டசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ராஜினாமா லாலு கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 13 எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதில் 5 எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()
