மாஸ்கோவில் துப்பாக்கி முனையில் சிறை பிடிக்கப்பட்ட 20 பள்ளி மாணவர்களை காவல்துறையினர் மீட்டனர்.
இந்த மீட்பு முயற்சியின் போது பள்ளி மாணவர்களை சிறை பிடித்த நபர் சுட்டதில் ஒரு காவலர் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்தனர். மாணவர்களை சிறை பிடித்தவர் அந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவரே எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்திற்கு பின்னர் பள்ளியிலிருந்து மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மாணவர்களை சிறை பிடித்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()

