ஜூலை 08, நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா (செவ்வாய்க்கிழமை) இன்று 08.07.2014 மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இதில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு திட்டங்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் புதிய திட்டங்களையும் சதானந்த கௌடா அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகரித்து வரும் எண்ணெய் விலை காரணமாக நெருக்கடியைச் சந்தித்து வரும் மத்திய அரசு, சூரிய மின்சக்தி மற்றும் பயோ டீசல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ரயில்வே திட்டங்களும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
![]()

