வயசானாலும் கவுண்டரின் நையாண்டி மாறவேயில்லை

goundamani

திரை உலக நட்சத்திரங்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள அபரிதமான பிரியத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

சமீபத்திய சம்பவம் ஒரு மாஸ் ஹீரோ சம்மந்த பட்டதோ , அல்லது அழகான இளம் நாயகி சம்மந்த பட்டதோ அல்ல, திரை உலகில் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை கவர்ந்த கவுண்டமணி நடிக்கும் 49 ஒ படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு சுவராசியமான சம்பவம் !!!

ஒரத்த நாட்டில் இருந்து தஞ்சை நோக்கி போய் கொண்டு இருந்த ஒரு பேருந்து, வயல் வெளியில் படப்பிடிப்பு நடப்பதையும், அதில் கவுண்டமணி நடித்து கொண்டு இருப்பதையும் பார்த்து பேருந்து ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த சொல்லி, படப்பிடிப்பு நடத்தும் வயல் வெளிக்கு செல்ல முற்பட்டனர்.

கவுண்டமணி உண்மையிலே விவசாயியாக மாறி விட்டாரோ என்று தங்களுக்குள் விவாதித்து கொண்டு சென்ற போது, அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, யாரை பற்றி பேசி கொண்டு இருந்தார்களோ அந்த கவுண்டர் அவர்கள் அருகிலே நின்று கொண்டு இருந்தார்.

அத்துடன் வந்து இருந்தவர்கள் ஒவ்வொருவரையும் நலம் விசாரித்ததோடு அவரது பாணியில் நகையாடி கொண்டு இருந்தார். இருளையும் மீறி காற்றில் அங்கு இருந்தோரின் சிரிப்பு சத்தம் கீற்று போல் பரவியது.
மீண்டும் பேருந்து பயணத்தை தொடங்கிய போது அவர்களின் கருத்து ‘வயசானாலும் கவுண்டரின் நையாண்டியோ நகைச்சுவை உணர்வோ, சற்றும் குறைய வில்லை என்பது தான்’.

By True Tamil

ஜனவரி 25, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு