மார்ச் 06: ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ராஸ்கல்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.
இயக்குனர் தரணி விக்ரம் சேர்ந்து பணியாற்றிய தில், தூள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.
தரணி, விக்ரம் கூட்டணி மூன்றாவது முறையாக ஒன்று சேரவுள்ளது.
இந்த படத்தில் திரிஷா அல்லது ஷன்சிகா ஆகிய இருவரில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருந்தது படக்குழு.
விக்ரம், தரணி ஆகிய இருவருடனும் திரிஷா வேலை செய்துள்ளதால் அவருக்கு இந்த பட வாய்ப்பு வரும் என்று எதிர்ப்பார்ப்பில் இருந்தார்.
ஆனால் தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகாவுக்கு சென்றுவிட்டதாக தகவல் கசிந்துள்ளது
இதனால் ஹன்ஷிகா ஏக குஷியில் உள்ளார் ,ராஸ்கல் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பது உறுதியாகி இருக்கிறது,
![]()

