
▶
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி பிறந்தநாளை கொண்டாடினார். கேக் வெட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்றைய போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும், விராட் கோலியின் பிறந்தநாளை இந்திய அணியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவில் கேக்கை வெட்டிய விராட் கோலி முதலில் ஷிகர் தவானுக்கு ஒரு வாய் கேக் ஊட்டுகிறார். அதன் பின் தவான் முதலில் கோலியின் முகத்தில் கேக்கை பூசினார். அதன்பிறகு அணியினர் அனைவரும் சேர்ந்து விராட் கோலியின் முகத்தில் கேக் பூசி கொண்டாடினர்.
ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள டிவிட்டில், “நம்பர் 1 பழிவாங்குதல். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன்” என்று குறிப்பிட்டு முகம் முழுவதும் கேக் பூசப்பட்ட விராட் கோலியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
![]()

