கருகிய மலேசியன் விமானம்: தானாக விழுந்ததா? நீடிக்கும் குழப்பம்!
ஜூலை18,கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் ராணுவத்தினரும், ராணுவத்தினர் தான் சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்களும் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளது குழப்பத்தை அதிகரிக்க செய்துள்ளது.
ரஷ்யாவிற்கு அருகில் சுடப்பட்டு விமானம் விழுந்துள்ளது. இதற்கிடையே சுட்டது உக்ரைன் ராணுவம், உக்ரைனுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், என ஒருவரையொருவர் கைகாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எப்படி சமாதானபடுத்தப் போகிறது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் தானாக விழுந்தது என்ற முடிவுக்கு வந்தால் போயிங் விமான நிறுவனம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுவிடும். மேலும் பல நிகழ விளைவுகளைச் சந்திக்கும் என தெரிகிறது.
![]()

