College student raped by  twin brothers

மார்ச் 04: கோயம்புத்துரில் உள்ள கல்லூரில் படிக்கும் இரட்டை சகோதரர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த மாணவியை அவர்கள் பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்டு நட்பாகியுள்ளனர்.

பிப்ரவரி 23-ம் தேதி அந்த மாணவியை அவர்கள் தங்களது அடுக்கு மாடிக்குடியிருப்புக்கு வர சொல்லி பின்னர் அவருக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர். இரட்டையர்களில் ஒருவன் அந்த மாணவியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளான்.

இதனையடுத்து சகோதரர்கள் மீது மாணவி கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சகோதரர்களை கைது செய்தனர்.

விசாரணையில் மாணவி மயக்கத்தில் இருந்தபோது அவரை கைப்பேசியில் வீடியோ எடுத்ததாக சகோதரர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். போலீசார் அந்த இருவரின் கைப்பேசிகள் மற்றும் மடிக்கணனிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ அலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

“சகோதிரிகளே ஜாக்கிரதை”

Loading