மார்ச் 20, உலகில் பல மொழிகள் இருந்தாலும் திரைமொழிக்கென ஒரு தனி இடமுண்டு. ஆகவே அந்த மொழியில் பலர் நிறைய கருத்துக்களைச் சொல்லி வந்துள்ளனர். இதில் காதலுக்கு தனி மரியாதைதான். அந்த வகையில் குக்கூ என புதிய திரைப் படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜு முருகன்.
திரைமொழி வந்த காலத்தில் இருந்து காதலை சொல்லும் இயக்குனர்களும் அசரவில்லை… ரசிகர்களும் சலிக்கவில்லை ..
கதை காதலாக இருந்தாலும் காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன….
அந்த வகையில் கண்பார்வை இல்லாத இருவரிடையேயான காதலை சொல்லி புதிய வடிவம் பெற்றிருக்கிறது தமிழ் சினிமா. மேலும் இப்படத்தில் நடித்திருக்கும் நாயகன் நாயகியின் திரை வாழ்க்கைக்கு இப்படமொரு புதிய வெளிச்சம். இதை உருவாக்கிய ராஜுமுருகன் இயக்கத்திற்கு மட்டுமே அறிமுகம். ஆனால் ஆனந்த விகடன் வார இதழின் ‘வட்டியும் முதலும்’ மூலம் பலரும் அறிந்த முகம். இவரது எழுத்தில் வெளியான கதைக்கே அவ்வளவு ரசிகர்கள் இருந்தனர். திரைமொழிக்கும் அது தொடரவேண்டும் என ராஜுமுருகனுக்கு எங்களது விமர்சனக்குழுவின்
சார்பில் ‘குக்கூ’ வாழ்த்துக்கள்.

