ஐதராபாத்:10.04.2014 வியாழன்.
வாலு படத்தில் இணைந்து நடித்த போது சிம்பும் ஹன்சிகாவும் காதலிப்பதாக தகவல்கள் கசிந்தன. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் புது படத்தில் சிம்புவும், நயன்தாராவும். மீண்டும் ஜோடி சேர்ந்ததால். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்பட்டது இதுகுறித்து இருவருமே பரஸ்பரம் பிரிந்து விட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர்,
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த காதல் விவகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த ஹன்சிகாவின் அம்மா, தனது மகளின் காதலை எப்படி முறிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்ததாகவும்,. ஆனால் மகளுக்கு நெருக்கடி கொடுத்தால், அதுவே காதலை தீவிரப்படுத்தி விடுமோ என்று பயந்து மகள் முடிவிற்கே விட்டு விட்டாராம்.
இந்நிலையில் திடீரென ஒருநாள், நான் இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன், சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டது என்று ஹன்சிகா டுவிட் செய்ததையடுத்து அவரது அம்மா மிகுந்த உற்சாகம் அடைந்தாராம். இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறாராம். காதல் முறிவுக்கு பிறகு மகளுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தேடி வருவதால் அவர் உற்சாகமாக உள்ளாராம்.
காதல் சுரம் திரும்பவும் வராதா என்ன!?
![]()

