மே 1, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 வது நடைமேடை அருகே கௌகாத்தி விரைவு ரயிலில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார் எனவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரவித்துள்ளனர் .
s4, மற்றும் s5, பெட்டிகள் சேதமடைந்துள்ளன. மேலும் இந்த குண்டு S5, பெட்டியில் 64 வது இருக்கையில் வெடித்துள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அசம்பாவிதம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
தடயவியல் நிபுணர்கள், குண்டுவெடிப்பு கட்டுப்பாட்டு நிபுணர்கள், மருத்துவர்கள் குழு, மற்றும் மத்திய பாதுகாப்பு போலீசார் உட்பட சென்ட்ரல் ரயில் நிலையம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
மேலும் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், மக்கள் பாதுகாப்புடன் உள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

