railway2

 

ஜூன் 22, வரும் 25ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவிருக்கும் ரயில் கட்டண உயர்வுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாத நிர்பந்தம் காரணமாகவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவிகிதமும், சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா 21.06.2014 சனிக்கிழமை கூறியதாவது:

கடுமையான கட்டாயத்தின் அடிப்படையிலேயே ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Loading