enginee

ஜூலை19, மாணவர்கள் படிப்பை மூலதனமாக வைத்து அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்த இடங்களை குறைந்த மதிப்பெண்கள் பெற்ற வசதியான மாணவர்களும் படிக்க முயற்சி செய்வதால் பெரிய பேராசிரியர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி நண் மாணாக்கருக்கு கிடக்கும் வாய்ப்பை தட்டி பிடுங்கிவிடுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க முதன்மைக் கல்லூரிகளைத் தேடும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பது நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் இருப்பவர்கள்தான்!

இவர்களைப் போன்றவர்கள்தான் தற்போது நடக்கும் கலந்தாய்வைப் பயன்படுத்தி விரக்தியான மாணவர்களை மூளைச் சலவைச் செய்து பணம் பண்ணுகிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்களும் பொறியியல் மாணவர்களே! இவர்களைப் போன்றவர்களால்தான் திருவள்ளூர் டி.டி. மருத்துவகல்லூரி போன்ற சம்பவங்கள் என்பதை மறந்த்விடகூடாது மாணவர்களே!

உங்கள் வாழ்க்கையில் சரியானத் தேர்வை உறுதிபடுத்தி நல்லறிவைப் பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Loading