ஆகஸ்ட் 15, எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!
– மகாகவி பாரதி
இந்த வரிகளோடு இன்றைய நம் 68 வது சுதந்திர தினம் அமையட்டும்! அனைவரும் இச்சுதந்திர திருநாள் உறுதிமொழியாக மது மாது சூது நீங்கி
தன்னைப் போல் பிறரை மதித்து போற்றுதலுக்குரிய மனிதராக வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்!
இந்திய நாட்டுக்காய் அன்றும், எல்லையில் இன்றும் உயிர் விடும் தியாக செம்மல்களை மறவாமல் போற்றுவோம்! கோட்டைகொத்தள கொடியேற்றுதலுடன்
முடியும் சுதந்திர கொடியில் சுதந்திரம் பரவட்டும்!
எண்ணிலடங்கா உயிர் தியாகத்தாலும், சொல்லிலடங்கா துயரத்தாலும் கிடைக்கப் பெற்ற சுதந்திரம் நம் சுய சிந்தனைக்குப் பயன்படட்டும்! இதுதான் சுதந்திரம்!
வாழ்த்துக்களுடன் உங்கள் செய்தி ஆசிரியர்!
![]()

