2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்காக நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறினார்.
இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சல்மான் கான் கூறுகையில்; இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சமமானது மற்றும் சமமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. நாட்டில் அரசியல்வாதிகளும் நல்ல பணிகளை செய்கின்றனர் என்று அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தார்.
மேலும், பேசுகையில் ஒரு அரசியல்வாதியாக எனக்கு ராகுல் காந்தியை பிடிக்கும். அவர் எப்போது உதவி வேண்டும் என்று கேட்கிறாரோ அவருக்காக பிரச்சாரம் மேற்கொள்ள விருப்பமாக இருக்கிறேன். “குஜராத்தில் மோடிக்கு நான் தேவையில்லை. அவர் மிகவும் பிரபலமானவர்” என்று சல்மான் கான் கூறியுள்ளார்.
![]()

