வரும் டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வருவது பற்றி அறிவிக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஐந்து மாவட்ட ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்போவதில்லையென்றும் அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவைத்தான் தெரிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தனது ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். கடந்த மே மாதம் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களைச் சந்திப்பது தள்ளிப்போனது.

முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துவருகிறார்.

Loading