நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தனது நண்பரான அருண்ராஜா காமராஜாவை வைத்து ஓர் படத்தினை தயாரிக்கவுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

