கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில், நடைபெற்ற 11-வது ஐ.பி.எல் டி20 போட்டியின் 18-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை அணி 9 விக்கட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்சை வீழ்த்தியத்தியது.
டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 191 ரன்கள் குவித்தது. அந்த அணியின் க்ரிஷ் லீன் அரை சதம் அடித்தார். அவர் 41 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 48 ரன்கள் எடுத்தார் பஞ்சாப் அணி சார்பில் பரினீந்தர் சரண், அண்ட்ரிவ் டை தலா 2 விக்க்கட்களை கைப்பற்றினர்.
192 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஜோடி ராகுல் மற்றும் கெய்ல் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்தனர். நடுவில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. DLS முறைப்படி13 ஓவர்களுக்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தொடக்க ஜோடியானா ராகுல் மற்றும் கெய்ல் இருவரும் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
சிறப்பாக விளையாடி 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கிய ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
![]()

