கனடாவின் ரொறன்ரோ நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோவில் அதீத குளிர், காற்று மற்றும் பனிப்பொழிவு வீசுவதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை நெடுஞ்சாலை 401ல் நடந்த விபத்தில், குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும், ஒன்றாரியோவில் அதிக எண்ணிக்கையில் விபத்துக்கள் நடந்துள்ளன எனவும் தெரியவருகின்றது.
![]()

