திரிணாமுல் காங்கிரஸ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இந்த தகவலை தெரிவித்த அவர், மத்தியில் பரம்பரை ஆட்சி அமைவதையும், பாரதீய ஜனதா ஆட்சி அமைவதையும் எதிர்ப்பதாக கூறினார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின், பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் புதிய அரசை ஏற்படுத்த திரிணாமுல் காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்றும், தேவைப்பட்டால் அந்த அரசுக்கு தங்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
![]()

