லண்டனில் சச்சின்-வார்ன் தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் உலகின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேர்ல்போன் கிரிக்கெட் கிளப்-ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு அணிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் மோதுகின்றன. இதில் மேர்ல்போன் கிரிக்கெட் கிளப் அணிக்கு பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் தலைமைவகிக்கிறார்.
ரெஸ்ட் ஆப் வேர்ல்டு அணிக்கு அவுஸ்திரேலிய அணியின் சுழல் ஜாம்பவான் வார்ன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கிரிக்கெட் போட்டி ஜூலை மாதம் 5ம்தேதி தியதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
சச்சின் அணியில் டிராவிட்டும் இடம் பெற்றுள்ளார். இரண்டு ஜாம்பவான்களும் மீண்டும் களத்தில் குதிக்க உள்ள இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
![]()

