மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். – கமல்
ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், இச்செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. நான் என் நல்ல தோழியை இழந்துவிட்டேன். சினிமா உலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
நடிகர் விவேக்- இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது! ஆயினும் நம் நெஞ்சில் எப்போதும் நிழலாடும்!
ஓ.பி.எஸ்- மிகச்சிறந்த நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு மிகவும் துரதிருஷ்டவசமானது என்று துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கை தலைமுறைகள் கடந்தும் அனைவரையும் கவர்ந்தது என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்றாம் பிறை, லம்ஹா போன்ற படங்கள் மூலம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என புகழாரம் சூட்டினார். மேலும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் .
ஸ்ரீதேவி நமது இதயங்களில் வாழ்கிறார் – டிவிட்டரில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா.
![]()

