காவிரி போராட்டம் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் பாடல் ஒன்றை இயற்றி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்காக
ஆதரவாக திரைத்துறையினர் பலரும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதமன், தங்கர் பச்சன் ஆகியோர் துணிச்சலாக களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ், பா.விஜய் மற்றும் பல நடிகர்களும், சினிமா பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் கவிதை ஒன்றை புனைந்து, அதை தானே பாடி காணொளி பதிவாக தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றியுள்ளார். இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ!
Watch the furious speech of @poetpaavijay1 about the #Caveryprotest!#CauveryIssue pic.twitter.com/Lrcm0qPNCa
— Namma Trend (@nammatrend) April 11, 2018
![]()

