
▶
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்ப்பேடை தனது இல்லத்தில் சிவகங்கை, மதுரை ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செயதியாளர்களிடம் பேசிய அவர், ரசிகர்களை நற்பணி நாயகர்களாக நகர்த்த வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நடிகர் கமல்ஹாசன், நற்பணி மன்றத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், பிப்ரவரி 24ம் தேதி மாநாடு நடத்தப்படாது என தெரிவித்தார்.
![]()
