பிரபல நடிகை ஸ்ரீதேவி[54] துபாயில் மாரடைப்பால் காலமானார்.
சிவகாசி அருகே மீனம்பட்டியில் 1963-ம் ஆண்டு ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்த இவர் 1967-ல் கந்தன் கருணை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து அரை நூற்றாண்டு காலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறப்புக்கு குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், அமிதாப், கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![]()

