கார்த்தியின் காற்று வெளியிடை படத்தினை அடுத்து இயக்குனர் மனிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பது நாம் அறிந்ததே.
இவரது இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, வரலக்ஷ்மி சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட ஓர் பெரிய நடச்சத்திர பட்டாளமே இணையவுள்ளது. லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பேரில், இப்படத்திற்கு செக்கச்சிவந்த வானம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Loading