திரிபுராவில் இன்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, மேடையில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கையெடுத்து கும்பிட்டபோது, அதை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி சென்றது மிகப்பெரிய அவமானமாக அமைந்துவிட்டது.

திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. 25ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்து, இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.

இந்த விழாவில் பிரதம்ர் மோடி உட்பட அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அப்போது, விழாவின் மேடைக்கு மோடி வருகை தந்த போது அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

ஒவ்வொருவருக்கும் பதில் வணக்கம் செலுத்திய மோடி, அத்வானியைக் கடக்கும் போது கையை கீழே இறக்கினார், இந்த நிகழ்வு தற்போது வீடியோவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. அத்வானியை மோடி புறக்கணிப்பது போன்று நடந்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சி செய்தி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. ட்விட்டரிலும் பகிரப்பட்டது. ஏராளமானோர், பிரதமர் மோடியின் அசட்டையான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் மரியாதை என்றும், பிரமதர் மோடி அத்வானியை பார்த்து வணக்கம் செலுத்தி இருக்கலாம், திமிராக செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
Modi LK Advani

இன்னும் ஒரு சிலர் அத்வானி குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்யவந்தபோது, அவருக்கு மைக் பிடித்தவர்தானே இப்போது பிரதமர் மோடி என்று கடுமையாகக் கூறி அதற்குரிய படத்தையும் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

Loading