Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

அம்மாவை சந்தித்த எம்.எல்.ஏக்களுக்கு ஆப்புவைத்த கட்சி தலைமை!

மார்ச்01: சென்னை கோட்டையில், முதலமைச்சர் ஜெயலலிதாவை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசு நேற்று சந்தித்து தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பான மனு ஒன்றை கொடுத்தார். இந்நிலையில், அணைக்கட்டு எம்.எல்.ஏ. கலையரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக, பா.ம.க.…

சென்னையில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பால் பரபரப்பு!

பிப்ரவரி 28: சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் உள்ளிட்ட 7…

காங்கிரசுடன் மோதிய சீமான்!

பிப்ரவரி 27: ராஜீவ் கொலைகுற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு தடை விதிக்கும் காங்கிரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சத்யமூர்த்தி பவனை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட வந்தனர். சாலையில்…

வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை! 10 கோடி பேருக்கு வேலை என வாக்குறுதி!

சென்னை, பிப்ரவரி 26:நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க தேர்தல் அறி்க்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

சென்னை பெண் கொலையில் திடீர் திருப்பம்! இருவர் கைது

பிப்ரவரி 25: சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாக்குமூலமும் அளித்துள்ளனர். கொல்லப்பட்ட உமா…

எங்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது கார்த்திக்!

பிப்ரவரி 25: தேசிய கட்சி உள்பட 3 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவதாகவும் நடிகர் கார்த்திக் கூறினார். நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில்…

சென்னையில் பயங்கரம்! தலைமை செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு!

பிப்ரவரி 24: சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று மதியம் 13.40 மணி அளவில் சுமார் 35 வயதுதுடைய ஒருவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். எரியும் தீயுடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த…

வட இந்திய ஊடகங்களில் உரக்க ஒலித்த தமிழனின் குரல்!

பிப்ரவரி 24: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர். அவர் திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட…

நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்!

சென்னை, பிப்ரவரி 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. எழும்பூர் பின்னி லிங் சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ்…

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

இனி எங்கும் அம்மா மயம்தான்!

பிப்ரவரி 20: சென்னையில் உள்ள சாலைகளில் இந்தியர் அல்லாதவர்களின் பெயர்களை மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2014- 15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகர மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 132…

ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலை! ஜெயலலிதா அதிரடி!

பிப்.19 இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.…