சென்னை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை பற்றி கூருகைல் ஆதாய கொலை, அரசியல் கொலை, சொத்து தகராறு கொலை என கொலை நடக்காத நாளே இல்லை என்ற நிலையும், சாதிக் கலவரத்தால் 144 தடை உத்தரவு வருடக்கணக்கில் பிறப்பிக்கின்ற நிலையும் தான் தமிழகத்தில் உள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ளது.
முதல்வர் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளின் தொகுப்பாக தான் ஆளுநரின் உரை. வரும் ஆண்டில் என்ணென்ன திட்டங்களை செய்யப்போகிறது என்ற விவரம் அவரது உரையில் இல்லை. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புதிய கொள்கை, திட்டங்கள் இல்லை. மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வழிவகை சொல்லப்படவில்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை “உப்பில்லா பண்டம் போல்’’ இருக்கிறது என்று கூறியுள்ளார்.
![]()

