
▶
இந்நிலையில் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்ட ஆ.ராசா, மற்றும் கனிமொழி இன்று சென்னை திரும்பினர். அவர்களை வரவேற்க சென்னை விமான நிலையம் சென்ற ஸ்டாலின், ஆ.ராசா மற்றும் கனிமொழியை ஆரத்தழுவி வரவேற்றார். அவர் மட்டுமில்லாமல் துரை முருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதுதவிர, ஏராளமான திமுக தொண்டர்களும் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
![]()
