மார்ச் 27, புதுடில்லி: லோக்சபா தேர்லுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இதில் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகம், மற்றும் பல்வேறு நலத்திடங்கள் செயல்படுத்தப்படும் உறுதி ஆகிய அடங்கியிருக்கின்றன. மக்களின் குரலே எங்களின் வாக்குறுதிகள் என்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது . கடந்த சில மாதங்களாக ராகுல் மக்களிடம் கலந்துரையாடல் நடத்திய போது கேட்கப்பட்ட யோசனைகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.
இந்த கட்சியில் தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:
- நாட்டின் வளர்ச்சியை 8 சதவீதத்திற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள்
- ராணுவத்தினருக்கு தேசிய ஆணையம்
- 125 பேர் கொண்ட பகுதிகளில் சாலைகள் அமைக்க உறுதி
- இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை அடையாளம் காண ஆணையம்
- மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற முழு முயற்சி
- ஊழல் ஒழிப்பு மசோதா பலப்படுத்தப்படும்
- ஊழலற்ற ஆட்சி தருவோம்
- வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம்
- அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்குதல்
- உற்பத்தி பெருக்கம்
- 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
- இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி
- கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 1 டிரில்லியன் டாலர் முதலீடு
- அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான செயல்பாடு
- ஏழைகள் அனைவருக்கும் வீடு
- கறுப்பு பணம் மீட்பில் சிறப்பு தூதுவர் நியமனம்
- குறைந்த வருமானம் உள்ளவர்களை காத்திட பொருளாதார ரீதியாக நிவாரணம்
- முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம்
- ஒரு பால் உறவு சட்ட விரோதமல்ல என அறிவிக்கப்படும்
- மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம்
- பெண்களுக்கு மருத்துவமனைகளில் ஆலோசனை மையம்
- பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்
- 10 லட்சம் பேர் வசிக்கும் பகுதியில் அதிவேக ரயில்கள்
- தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள்
- அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வழிவகை
- சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை
- நில ஆவணங்கள் கணினி மயம்
- இலங்கை தமிழர் வளர்ச்சிக்கு உதவி,
- இலங்கையில் மனித மீறல் குறித்த விசாரணைக்கு முயற்சி.
மொத்தம் இந்த தேர்தல் அறிக்கை 50 பக்கங்கள் கொண்டதாக அமைந்துள்ளது.
![]()

