mango

ஜூலை 11, புதுவை, காரைக்காலில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் சந்திரா எச்சரித்துள்ளார்.

மாம்பழத்தை உண்ணும் முன்பு நல்ல தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்து கழுவி விட்டு சாப்பிட வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் மற்றும் கட்டுப்பாடு சட்டப்படி கார்பைட் மூலம் மாம்பழத்தை பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டப்படி ரூ. 5 லட்சம் அபராதமும், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க வழியுண்டு.

மாம்பழங்களை கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைப்பதை உணவு பாதுகாப்புத்துறை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது தண்டனைக்குரிய குற்றம். எத்தியான் ரசாயன மருந்தை கொண்டு பழத்தை பழுக்க வைக்கலாம். எனினும் இப்பழங்களையும் தண்ணீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும் என்றார் ராகேஷ்.

Loading