தேமுதிக எம்எல்ஏக்கள் சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினர் இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ. பன்னீர் செல்லம் தேமுதிக குறித்து கூறியது:
தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை, மின்சார பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று இங்கு பேசுபவர்கள் அதற்கு தேவையான நிதியை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று பிரதமரிடம் சொன்னார்களா? இயற்கை இடர்பாடு ஏற்படும் நேரங்களில் புரட்சித் தலைவி அம்மா தில்லியில் நிதி கேட்டும் அவர்கள் தருவதில்லை. தமிழகத்திற்கு தேவையான மானியங்களும் தருவதில்லை. தே.மு.தி.க.வினர் தில்லி போனார்கள். ஏதோ பேசினார்கள். கனமாக கிடைக்கும் என்று சென்றவர்கள் ஏமாந்து குழப்பத்தோடு திரும்பி வந்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
![]()

