சென்னை்: பிரதமர மோடி நாளை சென்னை் வருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை வரும் பிரதமர் நாளை, சென்னை பல்கலை வளாகத்தில் நடைபெறும் தினத்தந்தி பவள விழா மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறும் திருமணவிழாவில் பங்கேற்கிறார்.
சட்டம்ஒழுங்கு, போக்குவரத்து, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மத்திய, மாநில உளவுத்துறை , நுண்ணறிவு பிரிவு போலீசார் என 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு மெரினா காமராசர் சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது .
இதன்காரணமாக அடையாறு, திருப்போரூர், கோவளம் செல்லும் பேருந்துகள் மெரினா லூப் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
மக்கள் கோபம்
சென்னையில் கடந்த 5ந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பல இடங்களில் மக்கள் அவதிபடுகின்றனர், சில உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சி நிரலில் தமிழ்நாட்டு மக்களை சந்திக்கிறார் என்று குறிப்பிட படவில்லை. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மக்களுக்கான பிரதமரா? மக்களை சந்திப்பாரா? நாளை தெரியும்.
உங்களுக்கான செய்திகளுடன் உங்களுக்காக களத்தில் – True Tamil
![]()

