bihar-bomb-plast

 

பீகார்: 10.04.2014 வியாழன்.

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலியாகினர். 5 பேர் காயம் அடைந்தனர்.

வாக்குபதிவு தொடங்கும் ஒருமணி நேரம் 30 நிமிடத்துக்கு முன்னதாக இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் ஜமுய் மக்களவை தொகுதியில் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸார் 2 ஜீப்பில் சென்ற போது வழியில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Loading