ஜுலை 21, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அங்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒரு கறைபடிந்த நீதிபதியின் தவறுகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அது பிரதமரின் கவனத்திற்கு சென்றது.
இதை அப்போது தமிழகத்தின் பிரதான கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மிரட்டியதால் ஊழல் நீதிபதியின் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த தகவலை அடுத்து குற்றச்சாட்டு நீதிபதி யார்? என்பது பற்றியும் பிரதமரை மிரட்டியது யார்? எனவும் மாநிலங்கவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டது. இதை தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவரும், அவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி பொறுமை காக்கும்படி கூறியும் அமளி குறையவில்லை.
இதைதொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டதாக கூறி முடித்துவைத்துள்ளார் . மீண்டும் அவை தொடங்கும் போது இப்பிரட்சினை பிரளயத்தை உண்டு பண்ணும் எனத் தெரிகிறது.
![]()

