vaiko-vijayakanth

ஏப்ரல் 02, விருதுநகர் மாவட்டத்தில் வைகோவிற்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தனது இல்லத்திற்கு அழைத்த வைகோவின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு சென்ற விஜயகாந்தை, வைகோ மாலை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் வைகோவின் வீட்டின் முன் அமைக்கப்பட்ட மேடையில் உரையாற்றிய விஜயகாந்த், விருதுநகர், விஜயகாந்த், வைகோ இம்மூன்றிலும் “வி” (V) என்ற எழுத்து உள்ளதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வைகோ வெற்றி பெறுவார்.

மேலும் அதிமுக, திமுக கட்சிகளை நம்பி ஏமாந்தது போதும். உங்களுக்காக என்றும் உழைக்கும் அண்ணன் வைகோவை வெற்றிபெறச்செய்யுங்கள் என்றும் அவருக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்கும் எனவும் கூறியுள்ளார்.

Loading