ஜூன் 20, மத்திய அரசுத் துறைகளின் சமூக வலைதளங்களில் ஹிந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், சமூக வலைதளங்களில் இந்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்படி மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்பு மொழி ஆங்கிலம். இதில் மாநில அரசுகள் மீது ஹிந்தியை திணிக்கக் கூடாது. எனவே, உள்துறை அமைச்சகத்தின் இந்த இந்தி திணிப்பு உத்தரவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கடிதம் வாயிலாக கூறியுள்ளார்.
இதே கருத்தைத்தான் சிறிது இலக்கியம் கலந்து மொழிப் போர் களங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்றும், இது மறைமுக இந்தி திணிப்பு எனவும், இந்தி மொழி தெரிந்தோர் தெரியாதோர் என பாகுபடுத்த நினைக்கும் சாதி எனவும் மு க அவர்கள் கூறியிருந்தார்.
இப்ப சொல்லுங்க இருவரும் ஒற்றுமைதானே!
![]()

